×

பெருங்குடி பெட்ரோல் பங்க்கில் திடீர் தீவிபத்து


துரைப்பாக்கம்: பெருங்குடி பெட்ரோல் பங்க்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசராரணை நடத்தி வருகின்றனர். சென்னை பெருங்குடி கந்தன்சாவடி பழைய மகாபாலிபுரம் சாலையில் பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பங்க்கிற்கு பெட்ரோல் போட இரு சக்கர வாகனத்தில் 2 பேர் வந்தனர். பெட்ரோல் போட்டு விட்டு இரு சக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்தனர்.

ஆனால் ஸ்டார்ட் ஆகாததால் சைலென்சரில் இருந்து வந்த தீப்பொறி பெட்ரோல் போடும் இயந்திரத்தில் பட்டு தீப்பற்றியது. உடனே அந்த வழியாக சென்ற குடிநீர் லாரியை பொதுமக்கள் மடக்கி நிறுத்தி தீயை அணைத்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து துரைப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post பெருங்குடி பெட்ரோல் பங்க்கில் திடீர் தீவிபத்து appeared first on Dinakaran.

Tags : Sudden ,Perungudi petrol station ,Duraipakam ,Chennai ,Dinakaran ,
× RELATED விமானப்படை வாகனம் மீது பயங்கரவாதிகள்...